ஏதோவொரு பரவசம்
என்னை உன்னிடம் அழைத்து வந்தது!
எப்போதோ சிறுவயதில் பாடிய கொடிப்பாடல்
"பட்டொளி வீசி பறக்குது பாரீர்..."
உனைக் கண்டதும் – எனையரியாது
தானாகவே முணு முணுத்தேன்!
உன் கம்பீரத் தோற்றம் கண்டு
கோழைகளும் வீரர்களாவர்-
உனக்காக என்றால்
இந்த சிற்றுயிரும்
தியாகியாய் மாறும்!
மௌனமாய் நீ தவழும் அழகைக் கண்டு
இயற்கையும் உன் தாள் வணங்கும் - ஏனைய
இதயங்களும் வந்தனம் செய்யும்…
வந்தே மாதரம்.
No comments:
Post a Comment