RSS

Sunday, August 15, 2010

சுதந்திரப் பரவசம்






           ஏதோவொரு பரவசம்
           என்னை உன்னிடம் அழைத்து வந்தது!

           எப்போதோ சிறுவயதில் பாடிய கொடிப்பாடல்
           "பட்டொளி வீசி பறக்குது பாரீர்..."
           உனைக் கண்டதும் – எனையரியாது
           தானாகவே முணு முணுத்தேன்!

           உன் கம்பீரத் தோற்றம் கண்டு
           கோழைகளும் வீரர்களாவர்-
           உனக்காக என்றால்
           இந்த சிற்றுயிரும்
           தியாகியாய் மாறும்!

           மௌனமாய் நீ தவழும் அழகைக் கண்டு
           இயற்கையும் உன் தாள் வணங்கும் - ஏனைய 
           இதயங்களும் வந்தனம் செய்யும்…
           வந்தே மாதரம்.

No comments:

Post a Comment