நான் தான் ஆசைப்படுகிறேன் என்றால்
நிலவும் உன் வீட்டு ஜன்னல் வழியே
எட்டிப்பார்க்க ஆசைப்படுகிறதாம்!
நட்சத்திரங்கள் கண் சிமிட்டிப்
பேசிக்கொள்கின்றன...
நீ காலையில் சோம்பல் முறிக்கும் அழகைக் காண
தினம் உன் வீட்டெதிரில்
நான் தவமிருக்கிறேன் என்றால்-
சூரியனும் உன் வீட்டு வாசலில்
தவம் கிடக்கிறதாம்!
உன் வீட்டுக்கதவுகள் ரகசியமாய்
பேசிக்கொள்கின்றன...
நீ தினம் தலையில் சூடும் ரோஜா
எனதாகத்தான் இருக்க வேண்டும் என
நான் நினைத்தால்-
உன் வீட்டுத் தோட்டத்தில்
சண்டை நடக்கிறதாமே?! - நீ
எதை முதலில் பறிப்பாய் என்று...
நீ பேசும் அழகில்
சங்கீதம் கூட சற்று தடுமாறித் தான் போகிறது...
நானோ பேச்சற்றுப் போனேன்!
உன் செல்லச் சிணுங்கல்களில்
கால் கொலுசின் ஓசை கூட தோற்றுத் தான் போகிறது...
நான் உன்னிடம் தோற்றுப் போனதில்
என்ன ஆச்சரியம் இருக்கிறது?!
No comments:
Post a Comment